பெரியகல்லாறில் ஒன்றாக சமுத்திரம் சென்று தீர்த்தம் ஆடிய பிள்ளையார்,முருகன்

(புருசோத்)
திருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் இன்று காலை தீர்த்தோற்சவங்கள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று சமுத்திரத்தில் தீர்த்தோற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு பெரியகல்லாறில் உள்ள இரண்டு ஆலயங்களின் தீர்த்த உற்சவங்கள் இன்று இந்துமாசமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றன.

பெரியகல்லாறு சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய தீர்த்தோற்சவங்கள் இவ்வாறு நடைபெற்றன.

இன்று ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சென்று சமுத்திரக்கரையில் அங்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று பெருமளவான அடியார்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.