மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருவெம்பாவையினை முன்னிட்டு ஆலயங்களில் இன்று ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த பத்து தினங்களாக திருவெம்பாவை உற்சவம் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றுவந்தது.

நேற்று நள்ளிரவு ஆலயத்தில் விசேடபூஜைகள் ஆரூத்திரா அபிசேகம் நடைபெற்று இன்று அதிகாலை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த உற்சவத்தில் மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் தீர்த்த உற்சவம் நிறைவுபெற்றதும் ஆலயத்தில் திருப்பொன்னூஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இன்றைய உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.