மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள விசேட தேவையுடையவர்கள் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் உதவி வழங்கும் பணிகளை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் கல்வி மற்றும் வறிய மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ் உதயம் அமைப்பு தொடர்ச்சியான பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கில் மாற்றுத்திறனாளியை கொண்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் தாய்ச்சங்க உப பொருளாளர் பேரின்பராஜா அவர்களின் கடின முயற்சியினால் கந்தசாமி மற்றும் பீற்றர் ஆகியோரின் அனுசரனையில் நாவற்குடாவில் ஓர் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு ரூபா 85000 பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை வழங்கிவைக்கும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சுவிஸ் உதயம் அமைப்பின் உபசெயலாளருமான திருமதி செல்வி மனோகரின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் விமநாதன் தலைமையில் நாவற்குடா கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த தர்மபாலன்,நாவற்குடா கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி கலாமதி சாந்தலிங்கம் கிராம அபிவிருத்தி சங்கம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் சமுர்த்தி பயனாளிகள் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாணத்தில் கல்வி மற்றும் வறிய மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ் உதயம் அமைப்பு தொடர்ச்சியான பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கில் மாற்றுத்திறனாளியை கொண்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் தாய்ச்சங்க உப பொருளாளர் பேரின்பராஜா அவர்களின் கடின முயற்சியினால் கந்தசாமி மற்றும் பீற்றர் ஆகியோரின் அனுசரனையில் நாவற்குடாவில் ஓர் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு ரூபா 85000 பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை வழங்கிவைக்கும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சுவிஸ் உதயம் அமைப்பின் உபசெயலாளருமான திருமதி செல்வி மனோகரின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் விமநாதன் தலைமையில் நாவற்குடா கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த தர்மபாலன்,நாவற்குடா கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி கலாமதி சாந்தலிங்கம் கிராம அபிவிருத்தி சங்கம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் சமுர்த்தி பயனாளிகள் கலந்து சிறப்பித்தனர்.