பண்டிகைக் கால கொள்வனவுக்காக தளர்ந்தது சாய்ப்புச் சட்டம்.

நத்தார் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் வர்த்தக நிலையங்கள் அனைத்துக்கும் தை பொங்கல் வரை சாய்ப்புச் சட்டம் தளர்த்தப்படுவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
அதனடிப்படையில், மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற அனைத்து வர்த்தக நிலையங்களையும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்து, இந்தப் பண்டிகைக் காலத்தில் கொள்வனவுகளில் ஈடுபட பொதுமக்களுக்கு வசதியளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பலசரக்குக் கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படல் வேண்டும் என்று வர்த்தக சங்கத்தினரும் மாநகர சபையும் இணைந்து எடுத்த தீர்மானத்துக்கு ஏற்ப ஆதரவு நல்கி வரும் வர்த்தகர்களுக்கும் மாநகர முதல்வர் தமது நன்றிகளையும் தெரிவித்தார்