சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்காக பெரியகல்லாறில் நடைபெற்ற ஆத்ம சாந்தி பூஜை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நேற்று மாலை சுனாமி அனர்த்ததில் உயிர்நீர்த்தவர்களுக்கான ஆத்மசாந்தி பூஜைகளும் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15வது ஆண்டு நிறைவாகியுள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று மாலை சுனாமி அனர்த்ததில் உயிர்நீர்த்தவர்களுக்கான ஆத்மசாந்தி நிகழ்வுகள் நடைபெற்றன.

பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் மற்றும் வடபத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகம்,விஸ்வப்பிரம்மகுல வாலிபர் சங்கம்,கோல்டன் விளையாட்டுக்கழகம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் மற்றும் வடபத்திரகாளியம்மன் ஆலயங்களின் தலைவர் எம்.கிருபைராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுனாமி அனர்த்ததின்போது மகனை இழந்த தாயாரினால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்கான பூஜைகள் நடாத்தப்பட்டன.

பூஜைகளை தொடர்ந்து சுனாமி அனர்த்தம் தொடர்பான நினைவுரைகளும் நடைபெற்றன.