வெள்ளத்தில் மூழ்கி மக்கள் போக்குவரத்து செய்ய முடியாதளவிற்க்கு பாதிக்கப்பட்ட செங்கலடி ஆண்டார் குள இரு வீதிகள் முன்னால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் அவர்களினால் புனரமைப்பு.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசத்தில் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத வாறு வெள் நீரால் நிரம்பி காணப்பட்ட இரு வீதிகள் இரண்டு இன்றைய தினம் மட்டு வாலிபர் முன்னணியின் மேற்பார்வையுடன் சீரமைப்பு செய்யப்பட்டு மக்களின் போக்குவரத்துக்கு விடப்பட்டது.
இவ் இரு வீதிகளின் புனரமைப்புக்காக முன்னால் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராசசிங்கம் தனது சொந்த நிதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.