புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த விடுதலைப் புலிகள்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பொது ஜன பெரமுன கட்சியின் கோட்டபாய ராஜபக்சவுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் நடைபெற்று முடிந்த ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள  பொது ஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கௌரவ கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன் அவரின் வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அதில் தெரிவித்துள்ளனர்.