கோத்தா பெற்றிபெற்றால் எமது மாவட்ட அமைப்பாளர் மூலம் அபிவிருத்தி – பசில் திட்டவட்டம்

ஜ}லைக்கலவரம் முதல் தமிழ் பகுதிகளில் பல படுகொலைகளை செய்தவர்கள் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ வெற்றிபெற்றதும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திகள் தமது கட்சியின் அமைப்பாளர் சந்திரகுமார் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் ஆதரிக்கும் வகையிலான மக்களுடனான சந்திப்பு நேற்று மட்டக்களப்பு இருதயபுரத்தில் நடைபெற்றது.

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் இந்த கூட்டம் இருதயபுரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ கலந்துகொண்டு உரையாற்றினார்.

துமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவருகின்றது.இனியும் தமிழ் மக்களை அவர்கள் ஏமாற்றமுடியாது.தமிழ் மக்களுக்கான அனைத்து அபிவிருத்திகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம்.

எதிர்வரும் 17ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோத்தபாய அறிவிக்கப்பட்டதுடன் இந்த மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் யாவும் இந்த மாவட்டத்தின் எங்கள் அமைப்பாளரான சந்திரகுமார் மூலம் முன்னெடுக்கப்படும்.

இந்த மாவட்டத்தில் தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திகளையும் நாங்கள் செய்வோம் என்றார்.