மண்முனை மேற்கு பிரதேச "எதிர்பார்ப்பின் இளைஞர் முகாம்" நிறைவு பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.





தேசிய கொள்கை, பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் இலங்கை  இளைஞர் கழக 40வது  வருட நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக பிரிவுகள் தோறும் இளைஞர் பயிற்சி முகாம் வேலைத்திட்டங்கள்  நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின்  ஏற்பாட்டில் "எதிர்பார்பின் இளைஞர் முகாம்” என்ற தொனிப்பொருளில் வதிவிட இளைஞர் முகாம் வவுணதீவில்   கடந்த 01.11.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

 இவ்  இளைஞர் முகாமில்  பங்குபற்றிய இளைஞர்,யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கு நிகழ்வு நேற்று (03.11.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கணேசமூர்த்தி சசீந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பு மற்றும் வழிகாட்டலில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவரும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் தொடர்பாடல் பிரிவு தலைவருமான ரி.விமலராஷ்   தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் அதிதிகளாக சீ.மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் , முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தலைவர் மா.சசிக்குமார், வவுணதீவு சாலம்பைக்கேணி கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் சதீஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது  .