வெற்றியாளர் பாராட்டு

 (வெல்லவூரான்.எஸ்.நவா)
மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தின் வெற்றியாளர்களை பாராட்டும் விழா 21.10.2019 திங்களன்று நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி திரு.த.அருள்ராசா வருகை தந்து சிறப்;பித்தார்.

2019ம் அண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற எட்டு மாணவாகள் தரம் 12,13 வகுப்பக்களிலே மாதாந்த பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் சமூக விஞ்ஞான வினாவிடை போட்டியில் மாகாண மட்டத்தில் 2ம் இடத்தை பெற்ற மாணவி கோ.கஜீதா மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்ற சைவசமய பாடப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 68 மாணவர்கள் வலய மட்ட விளையாட்டுப் போட்டியிலே வெற்றிவாகை (2017)ல் சூடிய 10 மாணவர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் பரீட்சையிலே தேர்வாகி சித்தி பெற்ற வித்தியாலய ஆசிரியர் திரு.கி.கிருபாகரன் ஆகியோர் பாரட்டி பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.