கீர்த்தி சிறி விருது பெற்ற மட்டு வாலிபர் முன்னணி தலைவர்.




இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையால் கிழக்குமாகாண சமாதான நீதவான்கள் மாநாடு மற்றும்  கெளவிப்பு நிகழ்வு  அட்டாளைச்சேனையில் நேற்று (12.10)  மாலை நடை பெற்றது.

 இந் மாநாட்டில் சமூகத்திற்காக சிறந்த சேவையாற்றிய சமாதானநீதிவான்களுக்கு அவர்களின் சமூக சேவையை பாராட்டி  கீர்த்திசிறி  விருது வழங்கி கெளரவிக்கும் வைபவவும் இடம்பெற்றது.

 இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர்  லோகிதராஜா தீபாகரன் அவர்களுக்கும் கீர்த்தி சிறி விருது வழங்கப்பட்டது .

 இலங்கை தமிழரசுகட்சியின் இளைஞர் அணி தலைவரான இவர் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராக கடமை புரிவதுடன்
எமக்காக நாம் உதவிடுவோம் வாரீர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ,
யோகாசன போதனாசிரியராக ,
கோல்டன் ஈகிள் விளையாட்டு கழக செயலாளராக ,
இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளராக,
யோகா ஆரோக்கிய இளைஞர் கழக செயலாளராக ,
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க செயலாளராக ,
குமாரத்தன் ஆலய நிருவாக உறுப்பினராக வட்டார தலைவராக ,
உதவும் கரங்கள் அமைப்பின் நிருவாக உறுப்பினராக ,
மட்டக்களப்பு மாவட்ட வளவாளர் குழாம் நிருவாக உறுப்பினராக , பல அமைப்புக்களில் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது .