சர்வதேச இளைஞர் தினத்தை (23.08) முன்னிட்டு மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற எல்லே போட்டியில் ஏறாவூர் பற்று பிரதேச களுவன்கேணி இளங்கோ இளைஞர் கழகம் வெற்றிபெற்று மண்முனை மேற்கு சவால் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது
நேற்று சனிக்கிழமை (24.08) ஈச்சந்தீவு பொது மைதானத்தில் நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, மண்முனை வடக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்டன.
குறிஞ்சாமுனை சக்தி இளைஞர்கழகத்தை வீழ்த்தி சவுக்கடி ஆதவன் இளைஞர் கழக அணியும், ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர்கழக அணியை வீழ்த்தி களுவன்கேணி இளங்கோ இளைஞர்கழக அணியும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய சவுக்கடி ஆதவன் அணி 30 பந்துகளுக்கு 06 ஓட்டங்களை பெற்று இளங்கோ அணிக்கு 7ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
எட்டு பந்து மீதமிருக்க எட்டு வீரர்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தினால் எட்டி கிண்ணத்தை தனதாக்கியது களுவன்கோணி இளங்கோ இளைஞர்கழக அணி.
பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ரி.சண்முகராசா , அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அலுவலர் கணேசமூர்த்தி சசீந்திரன் , அபிவிருத்தி உத்தியோகஸ்தரும், ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டுக்கழக தலைவருமான என்.சுதன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அ.தர்ஷிக்கா ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த களத்தடுப்பு வீரருக்கான கிண்ணம் செல்வன் கி. கிசாளன் பெற்றுக்கொண்டார்.
சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான கிண்ணம்
செல்வன் எஸ்.விதுசன் பெற்றுக்கொண்டார்.
செல்வன் எஸ்.விதுசன் பெற்றுக்கொண்டார்.













