அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் நிதியை மிகக் கவனமாக பயன்படுத்த வேண்டும்.





அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் நிதியை மிகக் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

கம்பரளிய உட்பட, பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் பாரியளவில்   அபிவிருத்தி திட்டங்களுக்கென ஒதுக்கப்படுகின்ற போது அந்த நிதிகள் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மிககவனம் செலுத்த  வேண்டுகோள் விடுத்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்.

அண்மையில் தனது மக்கள் சந்திப்புக்கான காரியாலயத்தை களுவாஞ்சிகுடி நகரில் திறந்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ,

 அபிவிருத்தி திட்டங்களுக்கென ஒதுக்கப்படுகின்ற நிதி மிகக் கவனமாக கையாளப்பட வேண்டும்,

 சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அது தொடர்பாக  மிகக் கவனமாக சமூக அக்கறையும், சேவை மனப்பாங்கும் கொண்ட கொந்தராத்துக்காரர்களுக்கு மாத்திரம் கொந்தராத்து வழங்க வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் நான் ஊழல் மோசடிகளுக்கு எதிரானவன். மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை. 

எங்களை இலஞ்சம் வாங்க சிலர் பழக்கி கொள்ள முனைகின்றனர், அது மட்டும் நடக்காது.
என்னிடம் 2000கு மேற்பட்டோரின் சுயவிபரக்கோவை வேலைவாய்ப்புக்காக கிடைத்திருக்கின்றன அவற்றுள் நான் சுமார் 45கு மேற்பட்டோருக்கு தொழில் பெற்றுக்கொடுத்திருக்கிறேன் . ஒரு சதமேனும் இலஞ்சம் வாங்கவில்லை இதுவே உண்மை என தனதுரையில் குறிப்பிட்டார்.