நாட்டை உலுக்கும் கடும்போக்குவாதத்தை இளைஞர்கள் நாங்கள் இல்லாதொழிப்போம்



(சசி துறையூர் )

நாட்டினுள் கடும்போக்குவாதத்தை தடுப்பதற்காக இளைஞர்களின் சக்தியை பெற்றுக்கொடுப்பதற்க்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை கல்லடி சன் சைன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு நாட்டில் இன்று மேலோங்கியுள்ள கடும்போக்குவாதத்தை தடுப்பதற்க்கான ஆரோக்கியமான  கருத்துக்களை  பகிர்ந்துகொண்டதுடன் பிரதமரிடம் கையளிப்பதற்க்கான  ஆவணமொன்றையும்  தயார்செய்தனர்.


இந்த வேலைத்திட்டத்தில் தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் மாவட்டஇளைஞர்சேவை அதிகாரிகள், இளைஞர்சேவை அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.