(சசி துறையூர் )
இரண்டுவருடங்களுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில் உயிரிழந்த மண்முனை வடக்கு பிரதேச முன்னால் இளைஞர் சேவை அதிகாரி அமரர் பிரசாந்தி பிரியதர்ஷனின் இரண்டாம் ஆண்டு நினைவாக தாகசாந்தி நிகழ்வு இன்று 23.07.2019 கல்லடியில் நடைபெற்றது.
தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமரர் பிரசாந்தி அவர்களின் கணவர் பிரியதர்ஷன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி யோ.கலாராணி நிஸ்கோ கூட்டுறவுச்சங்கத்தின் முகாமையாளர் வெ.தருமரெத்தினம், தேசிய சம்மேளன பிரதிநிதி செல்வன் த.விமலராஷ், மாவட்ட சம்மேளன தலைவர் ம.பிரியங்கன், இளைஞர் சேவை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தாகசாந்தி நிகழ்வில் மாவட்ட சம்மேளன நிருவாகிகள் ,மண்முனை வடக்கு பிரதேச சம்மேளன இளைஞர்யுவதிகள் பலரும் கலந்துகொண்டனர்.