இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின்  செயலாளராக மட்டு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் தெரிவு.


இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் 
தேசிய இளைஞர் சம்மேளன நிர்வாக தெரிவு கூட்டம் நேற்று 20.07.2019 ம்  திகதி சனிக்கிழமை  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் புத்தளம் (சிலாபம்) கிளையில் நடைபெற்றது.


முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதிநிதிகளை கொண்ட நிருவாக கட்டமைப்பில் 15 அங்கத்தவர்களை  மாத்திரமே தெரிவு   செய்யும்  நிர்வாக சபையில் மட்டக்களப்பு மாவட்டதையும் வடக்கு கிழக்கு மாகாணத்தையும் பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் உப தலைவராக இலங்கை செஞ்சிலுவை சங்க மட்டக்களப்பு கிளையின்   மாவட்ட  சம்மேளன செயலாளர் மதிசுதன் பிரியங்கன் தெரிவு செய்யப்பட்டார்.


உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட மதிசுதன் பிரியங்கன் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிருவாகம் இரண்டுவருடங்கள் இலங்கை முழுவதுமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.