சீயோன் தேவாலய தாக்குதலில் காயமடைந்த மேலுமொருவர் மரணம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

கூழாவடி,08ஆம் குறுக்கினை சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி(22வயது)என்னும் பெண்ணே இன்று பகல் உயிரிழந்துள்ளார்.
சீயோன் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் ஏற்கனவே 30பேர் உயிரிழந்ததிருந்த நிலையில் இன்;று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இராகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.