மட்டக்களப்பில் பிரதமர் ரணில்

மட்டக்களப்புக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்திற்கு வருகைதந்தார்.

இதன்போது தேவாலயத்தின் தற்போதைய நிலையினை பார்வையிட்ட பிரதமர் குறித்த தேவாலயத்தின் தலைமைகள் தொடர்பில் தேவாலயத்தின் போதகர் ரொசான் மகேஸனுடன் கலந்துரையாடினார்.

அத்துடன் தேவாலய புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படையினருடனும் கலந்துரையாடிய பிரதமர் குறித்த தேவாயலத்தினை புனரமைப்புச்செய்யும் பணியை முன்னெடுத்துள்ள படையினருக்கு பாராட்டினை தெரிவித்த அவர் அரசாங்கத்தின் நன்றியையும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் தனது அனுதாபங்களையும் அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டார்.