மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி அகஸ்திய பரதாலய மாணவர்களின் வரலாற்றுச் சாதனை!

இலங்கை - இந்திய நல்லுறவினை மேம்படுத்தும் முகமாக, கடந்த 14.06.2026 அன்று கொழும்பு காலி முகத்திடலில் 5000-ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்ட கின்னஸ் உலக சாதனை நிகழ்வொன்றை நிகழ்த்தியிருந்தனர்.
இந்நாட்டியப் பெருவிழாவில், மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் இயங்கிவரும் அகஸ்திய பரதாலயத்தைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் பங்கேற்றுத் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலக அரங்கில் நமது மண்ணின் கலைப் பாரம்பரியத்தை நிலைநாட்டிய  அகஸ்திய பரதாலய மாணவச் செல்வங்களும், அவர்களை வழிநடத்திய ஆசிரியரும் பங்கேற்று உலக கின்னஸ் சாதனையை பெற்று மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி மண்ணிற்கு  பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிகழ்வானது  sangamam global accademy, sangamam Liya holidays இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.