காத்தான்குடியில் தீவிர சோதனை நடவடிக்கை –பெருமளவான கணிணிகள்,சீடிக்கள் மீட்பு

காத்தான்குடி பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பெருமளவான கணிணி உபகரணங்கள் மற்றும் சீடிக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை முதல் காத்தான்குடி பகுதியில் பொலிஸார்,இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் விசேட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது பள்ளிவாயல்கள் மற்றும் சில பாடசாலைகள்,வீடுகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த பெருமளவு கணிணிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் மார்க்க விடயங்கள் தொடர்பான பல்வேறு சீடிக்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஐந்து பேர் காத்தான்குடி பொலிஸாரின் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகின்றது.