கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.



கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்  9 வருடங்களின் பின் நேற்று வியாழக்கிழமை 04.04 .2019 திகதி மட்டக்களப்பு கோட்டமுனை ஶ்ரீ வீரகத்தி பிள்ளையார் ஆலய முன்றலில் அதன் தலைவர் சிவஶ்ரீ க.கு.சீத்தாராம் குருக்கள் தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கி.குணநாயகம்
முன்னிலையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட குரு பீடாதிபதியாக சிவஶ்ரீ ச.காசிபதீஸ்வரக்குருக்களும்,
தலைவராக சிவஶ்ரீ க.கு. சச்சிதானந்ந சிவக்குருக்களும், செயலாளராக சிவஶ்ரீ அ.கு .லிகிதராஜக்குருக்களும், பொருளாலராக சிவஶ்ரீ நவரெத்தின முரசலிமாரக்குருக்கள்
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


புதிய நிருவாக தெரிவை அடுத்து குருமார் ஒன்றியத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலுடன் கூட்டம் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.