கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொடிய அரக்கர்களின் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.
மறுநாள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , ஊடக பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன், மட்டக்களப்புக்கு விரைந்தார் . அன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுனர் , மற்றும் ஆயரை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது .
ஆளுனரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது துக்க தினம் அனுஷ்டிப்பது தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
இந்த நிலையில் ஹர்த்தாலுக்கு கிழக்குமாகாண ஆளுனருடன் இணைந்து அழைப்பு விடுத்ததாக தமிழ் மக்களிடையே பாரிய எதிர்ப்பலை தோன்றியது . அந்த வகையில் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பாக உரையொன்று ஆற்றப்பட்டுள்ளது.
நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேஇந்த நேரத்தில் ஒரு சில வார்த்தைகளை சொல்வதற்கு ஒரு கனமான இதயத் துடன் நான் எழுகிறேன். முதலில், ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நாளன்று கொல் லப்பட்ட அனைவருக்கும் எங்கள்ஆழ் ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். காயமடைந்தவர் கள் விரைவாக குணமடைய நாங்கள் ஜெ பிக்கிறோம்.
"நாம் சமாதானத்தை நேசிக்கிறோம்.நாம் மன்னிக்கின்றோம். நமது கட வுள் பழிவாங்குதலின் கடவுள் அல் ல, அவர் சமாதானத்தின் கடவுள். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோ ம், மன்னிக்கின்றோம்."
இந்த படுகொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டனையேதும் இன்றி தப்பி போகாலம் என்பது இதன் பொருளாகாது . மாறாக வெறுப்பின் செய்கையை பு ரிந்த குற்றவாளிகளுக்கு எதிராக நாமும் வெறுப்போடு செயற்பட மாட் டோம் என்பதே இதன் பொருளாகும். ப ழிவாங்குதலை நோக்காக கொண்டிராமல் உண்மை, பொறுப்புப் கூறல் மற்று ம் நீதியை நோக்காக கொண்டுசெயற் படல் வேண்டும். குற்றவாளிகளை மு ழு முயற்சியோடு பின்தொடர்ந்து பிடித்துசட்டத்துக்கு அமைவாக நீ தியின் முன்னிறுத்துவது அரசாங் கத்தின் கடமையாகும். தகவல்கிடை த்திருந்தும் ஏன் தடுப்பு நடவடி க்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்கின்ற மிகமுக்கியமான கேள்வி கள் எழுந்திருக்கின்றன. இதற்கு பொறுப்பானவர்கள் - உயர் பதவியி ல்இருப்பவர்கள் முதலாக - ஆகக் குறைந்தது தம் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்யவேண்டும். காவல் துறையை ஜனாதிபதி தன் பொறுப்பின் கீழ் வைத்திருப்பது தொடர்பில் பட்ஜெட் விவாதத்தின் போது நான் கேள்வி எழுப்பினேன். இது தெளிவா க அரசியலமைப்புக்கு முரணானது. 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட் டபோது, சட்டம் மற்றும் ஒழுங்கு என்றுஅழைக்கப்படும் தனி அமைச்சி ன் கீழ் காவல்துறை அடக்கபட்டது. ஜனாதிபதி தன் கீழ்கொண்டிருக்க கூடிய 3 விடயங்களை அரசியலமைப்பு அடையாளப்படுத்தி காட்டுகின்றது . அவையாவன, பாதுகாப்பு, மகாவலி மற்றும் சூழல் என்பனவாகும். சட் டம் மற்றும் ஒழுங்கு அதில் இல் லை. இந்த அமைச்சை சட்டவிரோதமாக தான் வைத்திருப்பதன் மூலம் தடு த்து நிறுத்தியிருக்க கூடிய இத் தாக்குதல்களுக்கு இப்போது ஜனா திபதி தானே பொறுப்பை ஏற்கவேண்டி ய முதல் நபராகிவிட்டார்.
திங்கட்கிழமை மட்டக்களப்பில் பா
இறுதியாக, நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுகிறேன் - குறிப்பா க அரசியல்வாதிகள் - இத் துயருக் காக எந்த ஒரு சமுதாயத்தையும் குற்றம்சாட்ட வேண்டாம். இந்த நா ட்டிலுள்ள முஸ்லீம்கள் வன்முறை களால் திணிக்கப்பட்ட போதிலும் தாங்கள் வன்முறையில் ஒருபோதும் ஈடுபடவில்லை. அதை நாங்கள் மிகவு ம் மதிக்கிறோம். சிங்கள, தமிழர் கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனை யவர்கள் எல்லோருமாக கைகோர்த்து எங்களனைவருக்குமான நல்லதொரு எதி ர்காலத்தை நோக்கி பயணிப்போம்.