மண்டூர் மருங்கை நகர் ஸ்ரீநாகதம்பிரான் ஆலய தீர்த்தோற்சவம்

(எஸ்.நவா)

“ஈழமணிதிருநாட்டில் இயற்கை எழில் கொஞ்சும்; மட்டுநகரின் மண்டூர் மருங்கைநகர் நாவல்மர நிழலில் வீற்றிருந்து நாடிவருகின்ற அடியவர்களுக்கு கோடிவரமருளும்” வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலடி நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா கடந்த (15) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி (21) வியாழக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெற்றது.

ஆலய தலைவர் த.யோகராசா அவர்களின் தலைமையில் பிரதம குரு சிவஸ்ரீ கிருஸ்னமூர்த்தி அவர்களினால் கிரிகைகள் இடம்பெற்று மிகவும் சிறப்பாக ஏழு நாட்களும் பெருமளவான அடியார்கள் வருகைதந்து அருள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.