மட்டக்களப்பு கலுவஞ்சிகுடியை பிறப்பிடமாக கொண்டு தற்போது அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்துவரும் திரைப்பட இயக்குனரான
ஆறுமுகம் இளந்திரையனின் தந்தையார் சுகயீனமுற்றிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிட்னியில் காலமாகியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும் கொண்டு சமகாலத்தில் அவுஸ்திரேலியாவில் வசித்துவந்த இளைப்பாறிய அதிபருமான ஆறுமுகம் கதிரேசப்பிள்ளை (சிவபாதம்) தனது 83 வயதில் இறைபதம் அடைந்துள்ளதுள்ளார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி குருக்கள் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான கதிரேசபிள்ளை சிந்தாமணி தம்பதிகளின் அன்பு இளைய புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி தோம்புதோர் குமரசுவாமி தம்பதிகளின் அன்பு மருமகனும், பாக்கியரெத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், ஐந்து பிள்ளைகளின் தந்தையுமான இவரது பூதவுடல் சிட்னியில் உள்ள தமது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி கிரிகைகள் தொடர்பான விபரங்களுக்கு அன்னாரது மகனான திரைப்பட இயக்குனர் இளந்திரையன் +61401021551 அவர்களை தொடர்புகொள்ளலாம்.