சைக்கிளில் மட்டக்களப்புக்கு வந்த நாமல்ராஜபக்ஸ

தேவை நாடும் மகளிர் அமைப்புக்கு நிதி சேகரிப்புக்காக கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பவணி மட்டக்களப்பினை வந்தடைந்தது.

கல்கிசை,மௌன்ட்லேனியா சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை இந்த துவிச்சக்கர வண்டி பவனியை ஆரம்பித்தனர்.

இவர்கள் புத்தளம்,அநுராதபுரம்,கிரிதலை ஆகிய பகுதிக்கு சென்று இன்று காலை மட்டக்களப்பினை வந்தடைந்தனர்.

இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஸ உட்பட சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் என பலர் பங்குகொண்டிந்தனர்.

இன்று காலை மட்டக்களப்புவந்தவர்களை தேவைநாடும் மகளிர் அமைப்பின் தலைவி திருமதி சந்திரா தியாகராஜா,மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி சங்கீதா தர்மராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு வில்லியம்ஓல்ட் மண்டபத்தில் துவிச்சக்கர வண்டி பவணியில் வருகைதந்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அஸீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வீட்டு வன்முறைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் தேவைநாடும் மகளிர் அமைப்பு செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.