ஆரையம்பதி ஸ்ரீ சிவனோஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம்.


மட்டக்களப்பு ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனோஸ்வரர் ஆலயத்தில் கடந்த 27.02.2019 வாஸ்துசாந்தி கிரியையுடன் ஆரம்பமான ஸ்ரீ சிவனோஸ்வர பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவ கிரியாகலா பூசைவழிபாடுகள் 07.03.2019 வைரவர் பூசையுடன் நிறைவு பெறவுள்ளது.
அந்த வகையில் உற்சவ பெருவிழாவில் ஜந்தாம் (04.03) நாள் திங்கட்கிழமை மஹா சிவராத்திரி விரதத்தை  முன்னிட்டு காலை 06.30 மணிமுதல் தேரோட்டமும் ஆறாம்நாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தோற்சவமும் அதனைத்தொடர்ந்து அன்னதானமும்,  ஏழாம்நாள் மாலையில் எம்பெருமான் திருக்கல்யாணமும் பூங்காவனத்திருவிழாவும் இடம்பெற்று மூலமூர்த்தியை பொன்னூஞ்சல் ஆட்டும் வைபவும் சுவாமி ஊரைசுற்றி வீதிவலம் வரும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

உற்சவகாலங்களில் காலை 09.00 மணிக்கு ஸ்நபன அபிஷேகமும் , மாலை 07.00 மணிக்கு வசந்த மண்டப அலங்கார  பூசையும் இடம்பெறுவதுடன் சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி வலம்வருதலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.