ஜனாவின் தாயார் காலமானார் – நாளை இறுதிக்கிரியை

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தயார் நேற்று இரவு காலமானார்.

நேற்று இரவு மட்டக்களப்பில் காலமான ஜனாவின் தாயாரான திருமதி சாந்தமணி கோவிந்தன் அவர்களின் உடலம்; மட்டக்களப்பு நல்லையா வீதியில் இருந்து இன்று மாலை செட்டிபாளையம் பிரதான வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

செட்டிபாளையம் பிரதான வீதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை பிற்பகல் செட்டிபாளையம் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவர் முன்னாள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினராக காலஞ்சென்ற கோவிந்தன் அவர்களின் துணைவியுமாவார்.