மறத்தமிழர் கட்சி என்னும் பெயரில் புதிய கட்சி மட்டக்களப்பில் உதயம்

மட்டக்களப்பில் புதிய கட்சியொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று காலை வவுணதீவில் நடைபெற்றது.

 வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தில் மறத்தமிழர் கட்சி என்னும் பெயருடன் இந்த புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் ஆலோசகர் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசியக்கொடி,கட்சி கொடியேற்றப்பட்டு தேசிய கீதம்,தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதை தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரினால் கட்சி அங்குரார்ப்பண பிரகடனம் வாசிக்கப்பட்டது..

அதனைத்தொடர்ந்து கட்சி ஆலோகர் க.பன்னீர்ச்செல்வம், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.