தமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச்செய்யும் நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது –சீ.வி.

மேலும்மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை.எமது பிரச்சினைகளை இழுத்துஇழுத்து தூர்ந்துபோகச்செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஒரு அரசியல் தீர்வு ஊடாக வடகிழக்கு இணைந்த அரசியல் தீர்வொன்றினை தேர்தலுக்கு இணைவாக பெற்றுக்கொள்வதும் அவசியம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும்மேலும் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுவதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லையென தெரிவித்த அவர் இதனால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ச்சியாக இழுபறிக்கே செல்லும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்டஆயர் பொன்னையா ஜோசப் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று காலை ஆயர் இல்லத்திற்கு சென்ற வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் இந்த சந்திப்பினை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆயருடன் முன்னாள் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

குறிப்பாக நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள வலிந்து காணமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அனைவரையும் இதில் கலந்து வலுச்சேர்க்குமாறு இருவரும் அழைப்பு விடுத்தனர்.அத்துடன் தற்போது சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடியதுடன் கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் நடாத்தினார்.

தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் காரணமாகவே இன்று தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதாகவும் இதன்போது முன்னாள் வடமாகாண முதமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபை தேர்தல்கள் அந்ததந்த பகுதி மக்களுக்கு அடையாளம் ஒன்றை கொடுத்த நிலையில் மாகாணசபை தேர்தல்கள் நடாத்தப்படாமை அந்த அடையாளத்தினை அழிந்துசெல்லும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஒரு அரசியல் தீர்வு ஊடாக வடகிழக்கு இணைந்த அரசியல் தீர்வொன்றினை தேர்தலுக்கு இணைவாக பெற்றுக்கொள்வதும் அவசியம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும்மேலும் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுவதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லையென தெரிவித்த அவர் இதனால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ச்சியாக இழுபறிக்கே செல்லும் எனவும் தெரிவித்தார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் நடாத்தினார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரசியல் கட்சியொன்று தொடங்கவேண்டிய அவசியம் எமக்கு இருக்கவில்லை.மக்களுக்கு இருந்தது.மக்கள் வாக்களித்தவர்கள் அவர்களுக்கு உரியதை செய்யாமல் தமக்கு இஸ்டமானதை தான்தோன்றித்தனமாக தாங்கள் நினைப்பதுதான் சரியென்பதை அவர்கள் செய்துவந்தார்கள்.இது எங்களது அடிப்படை கொள்கைகளை மறந்து செயற்படுவதாக எங்களுக்கு உணரமுடிந்தது.அதன் காரணமாக எங்களுக்கு புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எங்களது மக்கள் தங்களை தாங்களே பார்க்ககூடிய தேவை ஏற்பட்டுவருகின்றது.மத்திய அரசாங்கம் ஏதாவது தரும் வெளிநாடுகள் ஏதாவது தரும் என்று தொடர்ந்து நாங்கள் வாழமுடியாது.எங்களை நாங்களே நம்பி எங்களது வாழ்க்கையினை முன்கொண்டுசெல்வது அவசியமாகின்றது.

எங்களுக்கு அரசியல் தீர்வு இன்னும் தரப்படவில்லை.பொருளாதார ரீதியாக நன்மைகள் தருவதாக கூறினாலும் தாங்கள் நினைத்ததையே எங்களுக்கு தருவார்களேயொழிய நாங்கள் கேட்பதை தரமாட்டார்கள்.இந்த நிலையில் மக்களிடையே ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி,எமது அடிப்படை விடயங்களை நாங்கள் தவறவிட்டால் எதிர்காலத்தில் எங்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டதன் காரணமாகவே புதிய கட்சியை உருவாக்கியிருக்கின்றோம்.

தமிழ் மக்களின் தலைமைகள் தமிழ் மக்களின் தேவைகள் தொடர்பில் உரிய நவடிக்கைகளை எடுக்காமல் வந்ததன் விளைவே தமிழ் மக்கள் கிழக்கில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்தது.இதனை சீர்படுத்துவது என்பது மிகவும் சிக்கலாகவும் கஸ்டமாகவும் இருக்கப்போகின்றது.

கிழக்கில் காணப்படும் காணிப்பிரச்சினைகள் மற்றும் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னாள் காணி ஆணையாளர்கள்,சட்டத்தரணிகளைக்கொண்டு குழுவொன்றினை அமைத்து புள்ளிவிபரங்களைப்பெற்றதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்தாலோசனை செய்யவுள்ளோம்.

ஜெனீவா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வழங்குவது என்பது நான்கு வருடத்தில் செய்யாததை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால்  அது நடைமுறைப்படுத்தப்படாது என்பது எமது கருத்து.

எமது போர் வீரர்களுக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளையும் முன்னெடுக்க அனுமதிக்கமாட்டோம் எனது எமது நாட்டு ஜனாதிபதியே கூறியிருக்கின்றார்.இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது மேலும்மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை.எமது பிரச்சினைகளை இழுத்துஇழுத்து தூர்ந்துபோகச்செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்கு அந்நீய நாடுகளும் உதவும் வகையில் செயற்படுவதுடன் எமது கட்சிகளும் அவ்வாறு செய்வதால் தங்களுக்குரிய நன்மைகளைப்பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து செயற்பட்டுவருகின்றனர்.நாங்கள் அவற்றினை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
எங்களைப்பொறுத்தவரையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பாதுகாப்பு சபைக்கு உண்மையினை எடுத்துக்காட்டி இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இதனை அனுப்பவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.

அவ்வாறு முடியாது விட்டால் தற்காலிகமாக இலங்கையில் நடந்தது என்ன,என்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்,எவ்வாறான செயற்பாடுகள்முன்னெடுக்கவேண்டும் என்பது தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு ஒரு குழு அமைக்கப்பட்டு சர்வதேச ரீதியான குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் நடாத்தப்படவேண்டும்.

ஒவ்வொரு நாடும் தங்களது நலநன அடிப்படையாக கொண்டே செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.இலங்கை எந்தளவுக்கு சீனா மீது உறவினைக்கொண்டுள்ளதோ அதற்கு ஏற்றாற்போல் மேற்கத்தைய நாடுகள் சிலசில நடவடிக்கைகளை ஏடுக்கவேண்டிய தேவையிருக்கின்றது.அவற்றினையெல்லாம் வைத்து கணித்த பார்க்கவேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது.சர்வதேச நிலமைகள் மாறுபட்டுவரும்போது எமக்காக பரிந்து சில நடவடி;ககைகளை எடுக்கவேண்டிய அவசியம்,சர்வதேச நாடுகளுக்கு இருக்கும்.அவ்வேளையில் இலங்கை அரசாங்கத்தினை மீறி நடவடிக்கையெடுக்ககூடிய காலகட்டங்கள் வரக்கூடும் என தெரிவித்தார்.