மட்டக்களப்பு மண்டுர் மருங்கைநகர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம்

(எஸ்.நவா)



ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மட்டுமாநகரின் தெற்கே அமைந்துள்ள மண்டுர் மருங்கைநாகர் கிராமத்தில் கோயில் கொண்டு அருளாட்சி புரிகின்ற ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் (15)வெள்ளிக்கிழமை பி.ப பூர்வாங்க கிரியைகள் இடபெற்று கொடியேற்றலுடன் ஆரம்பமாகி; (21.03.2019) வியாழக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.. 
இதன்போது இப்பிரதேசத்தின் சங்கர்புரம் மண்டுர்கோட்டமுனை மண்டுர் 1ரூ2 மருங்கைநகர் பாலமுனை அனைத்து மக்களும் இணைந்து இத்திருவிழாவினை மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கு முன்வந்துள்ளனர் எனவே சகல மெய்யடியார்களும் இவ்உற்சவத்தின் போது வருகைதந்து திருவருளினை பெறுமாறு ஆலய நிருவாத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்
இந்நிகழ்வின் சிவஸ்ரீ கிருஸ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.குறிப்பிடத்தக்கது