ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச செலகத்தின் அலுவலக உற்பத்தித்திறன் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அலுவலர்களுக்கான உற்பத்தித்திறன் விருத்திச் செயலமர்வு 2019.03.12 ஆம் திகதியன்று செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.என்.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கான வளவாளராக காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் வளவாண்மை வழங்கியிருந்தார்கள். இந்நிகழ்வின் போது உதவிப்பிரதேச செயலாளர் திரு.ஜீ.அருணன் மற்றும் கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் திரு.எம்.எம்.ஜரூப் ஆகியோருடன் அலுவலகஇ வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.