தமிழ் அரசின் வாலிபர் முன்னணியால் புதுப்பொலிவு பெற்றது இரண்டு பேருந்து தரிப்பிடம்.

(சசி துறையூர் )
தமிழ் அரசின் வாலிபர் முன்னணியால் புதுப்பொலிவு பெற்றது இரண்டு  பேருந்து தரிப்பிடம்.



இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினால் இன்று புதன்கிழமை (20.03.2019) ஊறனி பகுதியில் இரண்டு பஸ்நிலையம் வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டது .



இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் (கொத்துக்குளம், ஊறனி) மிக மோசமாக காணப்பட்ட இரண்டு பேருந்து தரிப்பிடங்கள் சிரமாதனம் செய்யப்பட்டு
வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டது .

இந்த வேலைத்திட்டத்தில் வாலிபர் முன்னணியின் உபதலைவர் துரை. மதன்,  மண்முனை வடக்கு பிரதேச இணைப்பாளர் எஸ்.ஜனகன் ,  உட்பட வாலிபர் முன்னணியின் அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த வேலைத்திட்டம் நிறைவில் வாலிபர் முன்னணி விடுத்த கோரிக்கையில் இது எல்லோருக்கும் பொதுவான சொத்து தூய்மையை பேணுவதுடன், விளம்பரங்கள் ஒட்டுவதனையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.