கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு 5ஆம் திகதி பூட்டு

மகா சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் இதனை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.