மட்/உதயபுரம் தமிழ் வித்தியாலயம் பாடசாலையில் மூன்று இல்லங்களுக்கிடையில் இடம் பெற்ற இல்லே விளையாட்டுப் போட்டி நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் சி.சசிதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை(01) பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் முதலாவது நிகழ்வாக பிரதம அதிதிகளை வரவேற்க்கும் நிகழ்வு இடம் பெற்று அத்துடன் மங்கள விளக்கேற்றலும் இடம் பெற்றது.அதிதியாக மட்டு மாவட்ட மேதிக அரசாங்க அதிபர் திருமதி என்.முகுந்தன் மற்றும் விசேட அதிதிகளாக தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி எஸ்.வரதராஜன் பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரேஸ் மற்றும் கௌரவ அதிகளாக பெரிய கல்லாறு கிராமத்தினைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பாடசாலைகளின் அதிபர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
காவேரி இல்லம் முதலாமிடத்தையும்,
இரண்டாமிடத்தில் ஜமூனா இல்லமும்,
மூன்றாமிடத்தில் கங்கா இல்லமும் பெற்றுக்கொண்டது. அத்தோடு சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.