சிறப்பாக நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் ஒளிவிழா

மட்டக்களப்பு மாநகரசபையின் ஒளிவிழா நேற்று மாலை சிறப்பான முறையில் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்;டக்களப்பு மாநகரசபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மக்கள் பிரதிநிதிகளினால் சபை அமைக்கப்பட்டு முதலாவது அமர்வாக இந்த அமர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஒளிவிழாவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது ஆன்மீக அதிதிகளாக புளிடிக்குடா பங்குத்தந்தை அருட்பணி லோ.லோறன்ஸ்,அமிர்தகழி மெதடிஸ்த திருச்சபையினை செர்ந்த அருட்சகோதரர் கே.பாஸ்கரன் ஆகியோர் கல்துகொண்டு நற்செய்தியை வழங்கினர்.

இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது யேசு கிறிஸ்துவின் பிறப்பினை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாலன் பிறப்பு நாட்டிய நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது மாநகரசபையின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.