மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் இளைஞன் கைது!


 நேற்றைய தினம் 21.12.2018 மட்டக்களப்பு வந்தாறுமூலை சேர்ந்த ரவீந்திரன் றினோத் (20 வயது) அவரது   வீட்டில் வைத்து காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஏறாவூர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவர் அண்மைக்காலங்களில் மட்டக்களப்பில் இடம்பெறும் பல காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான   ஆர்ப்பாட்டத்திற்கு பொது மக்களை ஒன்றிணைத்து சென்று இருந்தவர் எனவும் இதன் காரணமாகவே இக் கைது இடம்பெற்றிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.