சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்காக மாமாங்கத்தில் சிறப்பு பூஜை

சுனாமியின் தாக்கத்தினால் உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்களில் சிறப்புபூஜைகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சுனாமியின்போது உயிர்நீர்த்தவர்களுக்காக விசேட பூஜைகள்  நடைபெற்றன.

ஆலய பரிபாலனசபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது உயிர்நீர்த்தவர்களின் நினைவாக ஒளி தீபங்கள் ஏற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்து ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது உயிர்நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தியடையவேண்டும்,இன்னுமொரு அனர்த்தம் ஏற்படாமல்பாதுகாக்கவேண்டும் என்ற பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.