வெள்ள நிவாரண சேகரிப்பு பணிகள் மும்முரம் -இன்று இரவு கொண்டுசெல்லப்படும்

வடமாகாணத்தில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நிவாரணப்பொருட்களை கொண்டுசெல்லும் வகையிலான நிவாரண சேகரிக்கு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மட்டக்களப்பு மாநகரசபை சிவில் சமூக அமைப்புகள்,மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கம் என்பன இணைந்து இந்த பணியை முன்னெடுத்துள்ளன.

இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் விசேட நிவாரண சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிலையங்கள்,பிரதேச சபைகள்,விளையாட்;டுக்கழகங்கள்,பொது அமைப்புகள் தமது நிவாரணப்பொருட்களை கொண்டுசென்று வழங்குவதை காணமுடிகின்றது.

இந்த நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோர் இணைந்திருந்தனர்.

குடந்த நான்கு தினங்களாக சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் நாளை காலை வடமாகாணத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

தமது நிவாரண நடவடிக்கைகளுக்கு பெருமாளவானோர் ஆதரவளித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.