வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள குமாரத்தன் முதலாம் குறுக்கு வீதியில் உள்ள மக்கள் தமது வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரத்தின் கோவில் வீதியின் முதலாவது குறுக்கு வீதி மழை காலங்களில் மக்கள் பயன்படுத்தமுடியாத மிகமோசமான நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மழைபெய்தால் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்;கின்றனர்.

குன்றும் குழியுமாக காணப்படும் அவ்வீதியில் மழைகாலத்தில் ஒன்றரை அடிக்கு மேல் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அவ்வீதியில் வசிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை கவனத்தில் கொண்டு வீதியை புனரமைப்பு செய்துவழங்குமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடிகான்கள் அமைத்து வீதிகள் புனரமைக்கப்படும்போது எதிர்காலத்தில் குறித்த பகுதி வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்கமுடியும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.