சிறுவர் பாதிகாப்பும், உரிமைச் சட்டமும் தொடர்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு


 (லியோன்)

கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட  14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பாலர் பாடசாலைகளின்  ஆசிரியர்களுக்கான  பயிற்சி செயலமர்வுகள் நடைபெற்று வருகின்றன


இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்ட செயலமர்வில்  சிறுவர் உளவியல் , ,சிறுவர் பாதிகாப்பும் உரிமைச் சட்டமும் ,சுகாதாரமும் போசாக்கும் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டது

மட்டக்களப்பு கல்வி வலய பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி . கவின்யா ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான நடைபெற்ற பயிற்சி செயலமர்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை கல்விப் பணியக செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் கலந்துகொண்டார் .  

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான  பயிற்சி செயலமர்வில் வளவாளர்களாக  சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ் . கமலநாதன் ,வைத்தியர் டான் , வைத்தியர் கிர்த்திகா  மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள்   கலந்துகொண்டனர்