ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதம்

கந்தசஸ்டி விரதம் இன்று நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக ஆரம்பமானது.

சூரபத்மனை முருகப்பெருமான் சம்காரம் செய்த காலத்தில் கந்தசஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்த விரத காலத்தில் அடியார்கள் உபவாசம் இருந்து முருகப்பெருமானை நினைந்த விரதமிருப்பதுடன் ஆலயங்களில் வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள்.

இந்த கந்தசஸ்டி விரதத்;தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்கள் பூசொரிந்து வழிபடும் நிகழ்வு நடைபெற்றதுடன் கந்தபுராண படலமும் படிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.