மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் கதைப் போட்டியில் இரண்டாம் இடம்

(படுவான்.எஸ்.நவா)
கலாச்சார அலுவல்கள் அமைச்சு 2018ம் ஆண்டுக்கான தேசிய கலை இலக்கியப் போட்டியினை நடாத்தியிருந்தது.அதில் திறந்த போட்டிப் பிரிவில் “சிறுவர் கதை” எழுதிய திரு.ச.கணேசமூர்த்தி அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை சுவிகரித்துக் கொண்டுள்ளார்.மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய அதிபராகிய இவர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்திய சிறுகதைப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதலாமிடம் பெற்று வெற்றி வாகை சூடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.