ஆற்றுவாய் வெட்டப்பட்டது –வெள்ளம் குறையும் சாத்தியம்

மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்ததினை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் பிரதான ஆற்றுவாய் வெட்டும் நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம்,மட்டக்களப்பு மாநகரசபை,மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து இந்த ஆற்றுவாய் வெட்டும் பணியை முன்னெடுத்தன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மா.தயாபரன் உட்பட பலர் பிரசன்னமாயிருந்தனர்.

முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதனால் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலமை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெள்ள அனர்த்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற் காணிகள் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.