புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய சூரம்சம்ஹார நிகழ்வு




 (லியோன்)

உலகளாவிய ரீதியில் உள்ள இந்து ஆலயங்களில் கந்த ஸஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.


சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்து தர்மத்தினை நிலைநாட்டியதை குறிக்கும் வகையில் கந்த சஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

கந்த ஸஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிடடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு  புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று முருகன்பெருமான் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு  சூரம்சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  பெருமளவான  அடியார்கள் கலந்துகொண்டனர்.