(லியோன்)
மட்டக்களப்பு நாவக்குடா அனோரியா ஆங்கில கற்கைகள் நிலையத்தில் ஆறு வருடங்கள் ஆங்கில கல்வியின் பூர்த்தி செய்து 2018ஆம் ஆண்டு கல்வி பொது தர சாதாரண தரத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் , 2017 ஆம் அண்டு சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது ,
அனோரியா ஆங்கில கற்கைகள் நிலையத்தின்
நிர்வாகியும் ,ஆங்கில ஆசிரியருமான கே .குமரேசன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு
நிகழ்வில் அதிதிகளாக நாவக்குடா சின்ன லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை ஹென்றி மெருசன்
,அடிகளார் , கெபிடல் கெம்பஸ் முகாமையாளர் கே .தியாகரன் , வணிக ஆசிரியர் எம் டி எம்
,சகறான் ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களும் ,வெற்றிக்
கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை
நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் ஆங்கில
கற்கைகள் நிலையத்தின் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்