மாவடிமுன்மாரியில் ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீர் சிந்த மழை நீர் துளிகளுடன் மாவீரர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக இன்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீர் சிந்த மழை நீர் துளிகளுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மண்முனை தென் மேற்கு பிரதேச மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மாவீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

மாலை 6.05 மணியளவில் மாவீரர் நினைவு மணி ஒலிக்கபட்டு பிரதான தீபச்சுடரை மேஜர் பயில்வானின் தாயார் ஏற்றிவைக்க மாவீரர்களை நினைவுகூரும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டது.

இதன்போது மாவீரர்கள் பாடல்கள் ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.