கோறளைப்பற்று தெற்கு பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான பாதுகாப்பான சமூகவலைத்தள பாவனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
கிரான் கோரகல்லிமடு றெஜி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வு செயலமர்வு நேற்று சனிக்கிழமை 20.10.2018 நடைபெற்றது.
கோறளைப்பற்று தெற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ரி.விந்தியன் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த செயலமர்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்திற்குட்பட்ட சுமார் 60 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு பாதுகாப்பாக சமூகவலைத்தளங்களை பாவித்தல் தொடர்பாகவும், சமூகவலைத்தள கையாளுகைதொடர்பான அடிப்படை சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வு பெற்றுக்கொண்டனர்.
விரிவுரைகளை சட்டத்தரணி எஸ்.றேச்சள்,
வெள்ட் விசன் நிறுவனத்தின் வட கிழக்கு மாகாண தகவல் தெழில் ஙட்ப உத்தியோகஸ்தர் ரி.றணிசன், K. கயல்வேந்தன் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச புள்ளி விபர உத்தியோகத்தர் ஆகியோர் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.