கோறளைப்பற்று வாழைச்சேனையில் சமூகவலைத்தள பாதுகாப்பு செயலமர்வு.

கோறளைப்பற்று வாழைச்சேனையில் சமூகவலைத்தள  பாதுகாப்பு செயலமர்வு.




கோறளைப்பற்று வாழைச்சேனை  பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான பாதுகாப்பான சமூகவலைத்தள பாவனை தொடர்பான விழிப்புணர்வு  செயலமர்வு
பிரதேச செயலக  மண்டபத்தில்  இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வு செயலமர்வு  நேற்று சனிக்கிழமை 20.10.2018  நடைபெற்றது.

த.சபியதாஸ் கோறளைப்பற்று  பிரதேச இளைஞர் சேவை அதிகாரி  ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த செயலமர்வில் கலந்துகொண்ட கோறளைப்பற்று  பிரதேசத்திற்குட்பட்ட சுமார் 60 இளைஞர் யுவதிகளுக்கு  பாதுகாப்பாக சமூகவலைத்தளங்களை பாவித்தல் தொடர்பாகவும்,  சமூகவலைத்தள கையாளுகைதொடர்பான அடிப்படை சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

விரிவுரைகளை  வை.வாசுதேவன் கோறளைப்பற்று
பிரதேசசெயலாளர், சட்டத்தரணி எஸ்.றேச்சள்,
 ஆகியோர் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.