தோட்ட மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிகையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மலைய தோட்டத்தொழிலாளர்களின் சம்பள இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வினை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாழ் இளைஞர்கள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது.

இந்த போராட்டத்தில் மலைய மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் 1000ரூபா சம்பள கோரிக்கைக்கு ஆதரவாகவும் அவைரையும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மழையிலும் வெளியிலிலும் பாடுபட்டு இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் மலைய மக்களின் நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்யெடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எங்களை வாழவிடு,மலையக மக்களை வாழவை,ஏழை மக்களை ஒடுக்காதே,தோட்டக்கம்பனிகளின் ஏவல்காரர்களாக அரசாங்கமே செயற்படாதே போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்க்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.