மலையக மக்களுக்கு ஆதரவாக கிழக்கில் வெடிக்கும் போராட்டம்

மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கிழக்கில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வினை வழங்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நாளை காலை 10.00மணிக்கு முன்னெடுக்கவுள்ளது.

இந்த போராட்டத்தில் மலைய மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் 1000ரூபா சம்பள கோரிக்கைக்கு ஆதரவாகவும் அவைரையும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.